Wednesday, September 22, 2010

காதல்கவிதைகள்

நான் சாகும் தருவாயிலவது
வந்துவிடு உன் இதயத்தில்
சிறுதுளியாவது ஈரம் இருக்கிறதா
நான் பார்க்கவேண்டும்!!....

காதல் கவிதைகள்

நீ தாவணியை
சரி செய்த பின்தான்
நானும் கவனிக்க நேர்ந்தது
அதை!!......

காதல் கவிதைகள்

நான் செத்துபோயிருக்க
வேண்டும் நீ என்னை
காதலித்த அந்த சந்தோஷதருணங்களிலேயே!!..

Friday, September 10, 2010

அவலம்

நத்தையின்
உயிர்ப்போன அவலத்தை
உலகுக்கு தெரிவித்தபடி
ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன
நொறுங்கிய நத்தை ஓடுகள்.....