Thursday, October 28, 2010

ஒரு மழை காலத்து
மாலை நேரம்
பக்கத்து பங்களாக்களில்
வெளிப்படும்
வெறுப்பேற்றும்
 உணவு வாசனை
வந்தேறிகள் உயர்ரகம்
இம்மண்ணிலே பிறந்த
நங்கள்
தீண்ட தகாதவர்கள்
கல்லால் விரட்டப்படுகிறோம்!!!

Saturday, October 23, 2010

கொலைத்தொழில்


மாய உலகமிது
மந்திர உலகமிது
இன்பமும் துன்பமும்
அமாவாசை,பௌர்ணமி போல
மாறி மாறி வரும்
பாலஸ்தீனம்,ஈழம் போல 
நானும், நீயும்,நம் இனமும்
கேட்க நாதியற்று
கொல்லநேரலாம்
அது தீபாவளி,ரம்ஜான்,சாதாரண ஞாயிராகவும்
இருக்க நேரலாம்
கொள்வது அவர்கள் தொழில்
அது ஆடாகவும் இருக்கலாம்
மனிதனாகவும் இருக்கநேரலாம்!!!

Wednesday, September 22, 2010

காதல்கவிதைகள்

நான் சாகும் தருவாயிலவது
வந்துவிடு உன் இதயத்தில்
சிறுதுளியாவது ஈரம் இருக்கிறதா
நான் பார்க்கவேண்டும்!!....

காதல் கவிதைகள்

நீ தாவணியை
சரி செய்த பின்தான்
நானும் கவனிக்க நேர்ந்தது
அதை!!......

காதல் கவிதைகள்

நான் செத்துபோயிருக்க
வேண்டும் நீ என்னை
காதலித்த அந்த சந்தோஷதருணங்களிலேயே!!..

Friday, September 10, 2010

அவலம்

நத்தையின்
உயிர்ப்போன அவலத்தை
உலகுக்கு தெரிவித்தபடி
ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன
நொறுங்கிய நத்தை ஓடுகள்.....